Friday, September 12, 2014

LATIHAN BT CUTI SEKOLAH TAHUN 4 ROS

அன்பு வணக்கம் மாணவர்களே! அனைவருக்கும் விடுமுறை வாழ்த்துகள்.
விடுமுறை காலப் பயிற்சிகளை செய்து வரவு.
பிரிவு 1; வாக்கியம் அமை

1. வலம் = கோயிலைச் சுற்றி வலம் வருதல்.
2. வளம் = செடிகள் வளமாக வளர உரம்.
3. வலை= வலை வீசி மீன் பிடித்தல்
4. வளை= வளைவான பாதை/ வளைத்துப் பிடித்தல்.
5. மூலை= அறையின் மூலை/ வீட்டின் மூலை
6. மூளை=மனிதனின் மூளை

பிரிவு 2; திறந்த முடிவு கட்டுரை

1. நூலகத்தின் பயன்

நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.
    நம் நாட்டில் தேசிய நூலகம், மாநில நூலகம், என பொது நூலகங்களும்,மற்றும் நடமாடும் நூலகங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப் பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
   நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது.
   “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே.
   தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் நூலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மாணவர்களாகிய நாமும் நூலகம் தரும் பயம் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம்.
நன்றி; bahasatamilupsr
2.நான் ஒரு மிதிவண்டி (கட்டுரை எழுதுக)
முன்னுரை
  • விடுகதையாக அறிமுகம் செய்தல்
  • சிறுவர்கள்/ மாணவர்கள் விரும்பிப் பயன்படுத்துவர்
  • ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வேன்.
கருத்து 1
  • பெயர், பிறப்பு, வடிவம், நிறம் போன்றவற்றை குறிப்பிடுதல்.
  • நிறைய நண்பர்கள்
கருத்து 2
  • ஏற்றுமதி
  • துறைமுகம் ( கிள்ளான்/ பாசீர் கூடாங் )
  • மிதிவண்டியை கடைக்குக் கொண்டு செல்லுதல்
கருத்து 3
  • கடையின் உரிமையாளர் பார்வைக்கு வைத்தல்
  • விலை பட்டியல் ஒட்டுதல்
  • ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்தல்
கருத்து 4
  • சிறுவன் ஒருவன் தன் பெற்றோரிடம் அடம்பிடித்தல்
  • அப்பெற்றோர் பணம் கொடுத்து வாங்குதல்
  • கண்ணும் கருத்துமாய் பயனபடுத்துதல்
 கருத்து 5
  • ஏற்பட்ட அனுபவம்
  • மறக்க முடியாத அனுபவம்
முடிவு
  • இன்றைய நிலை 
  •    இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
நான் ஒரு காலணி
       கண் விழித்தேன். கண்கள் என் உரிமையாளரைத் தேடின. ஒரே இருட்டு. என் நெஞ்சம் பயத்தால் படபடத்தது. இருட்டிலிருந்து எப்படியாவது வெளியே வர வேண்டும் என்று தவித்தேன். அங்கும் இங்கும் முட்டிக் கொண்டேன். நான் குப்பைத் தொட்டினுள் இருப்பதை உணர்ந்தேன். என் நினைவலைகள் கரைபுரண்டோடுகின்றன. என் கதையை உங்களிடம் கூறுவதன் வழி மன அமைதியடைவேன். நான் ஒரு காலணி. நான் மலேசியாவில் ஷா ஆலமில் பிறந்தேன். என் பெயர் அடிடாஸ். மல்லிகைப் பூ போன்று வெள்ளை நிறத்தில் அடிபட்டு, குத்துப்பட்டு உருவாக்கப்பட்டேன்.
   அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தாலும் துணையுடன் அடைக்கப்பட்டிருந்தேன் என்ற மகிழ்வு ஒருபுறம். என்னுடன் ஆயிரக்கணக்கான நண்பர்களும் பிறந்தார்கள். ஒரு நாள், ஷா ஆலமிலிருந்து குளுவாங் எனும் ஊருக்கு ஒரு கனரக வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டோம். அங்கு ஒரு பெரிய கடையில் எங்களை இறக்கினார்கள். அக்கடைக்காரர் எங்களைக் கண்ணாடி அலமாரியில் முறையாக அடுக்கி வைத்தார். அந்தக் கடைக்குப் பலர் வந்து சென்றனர். இப்படியே பல நாட்கள் ஓடின. நான் மிகவும் மகிழ்ச்சியாக என் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தேன். நாங்கள் வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம்.
    ஒரு நாள், ஒரு சிறுமி தன் தாயுடன் அங்கு வந்தாள். என்னைக் கூர்ந்து நோக்கினாள். தன் தாயின் காதில் கிசுகிசுத்தாள். அவர் அந்தக் கடைக்காரரிடம் என்னைச் சுட்டிக் காட்டி என் மதிப்பை விலை பேசினார். இறுதியில், என்னை விலைகொடுத்து வாங்கினார். என் கன்னத்தில் ஏதோ வழிந்தோடியது போல் இருந்தது. தொட்டுப் பார்த்தேன். சந்தேகமில்லை. அஃது என் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர்தான். என் சகோதரிகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் கவலையுடன் அச்சிறுமியுடன் சென்றேன். என் உரிமையாளரின் அரவம் கேட்டு நான் எண்ண அலைகளிலிருந்து விடுபட்டேன்.
  என் உரிமையாளர் ஒவ்வொரு புதன்கிழமையும் என்னைத் தரமான ஷாம்புவால் குளிப்பாட்டுவார். வெள்ளைப் பூசி என்னை வெயிலில் உலர வைப்பார். இதமான வெயிலின் ஒளியில் நான் குளிர்காய்ந்து கொண்டிருப்பேன். நான் எப்பொழுதும் தூய்மையாக இருப்பேன். என் உரிமையாளர் என்னை எங்குச் சென்றாலும் என்னைத் தம் காலில் அணிந்து கொள்வார். நானும் அவருக்கு இரவு பகல் பாராமல் உழைத்தேன்.
      எனக்கு வயது ஏறிக்கொண்டே போனது. வயதானதால் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதை என் எஜமானியான அச்சிறுமி கவனித்தார். நான் இன்னும் பல நாட்களுக்கு உழைக்க மாட்டேன் என்று முடிவு செய்து அருகில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் வீசினார். அவர் என்னை வீசிய வேகத்தில் என் தேகம் முழுவதும் காயம்பட்டு, வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருக்கிறேன். பார்த்தீர்களா என் பரிதாப நிலையை!

Monday, September 8, 2014

karangan BONUS BM

PENULISAN BM

வாக்கியம் அமைத்தல்

மாதிரி வாக்கியம்



சொல்         குறிப்புச் சொற்கள்              வினைச்சொற்கள்         வேற்றுமை உருபு
1. படு    –    கட்டிலில், மெத்தையில்           படுத்து                               -
2. பாடு  –     இனிமையாக, மேடையில்     பாடினான்                          -
3. பனி   –            சூரியன்                                        –                            பனியில்
4. பணி –       அலுவலகத்தில்                               –                            பணியை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
படு     –       கதிரவன் இரவில் தன் கட்டிலில் படுத்து உறங்குவான்.
பாடு  –       பூங்குழலி தன் இனிமையானக் குரலில் பாடி அனைவரது பாராட்டையும் பெற்றாள்
பனி   –  காலை சூரியன் உதித்ததும் பூக்களில் படிந்திருந்த பனித்துளிகள் மறைந்தன.
பணி –   வேலவன் அலுவலகத்தில் தனக்கு வழங்கிய பணியை  திறம்பட செய்ததால் அவருக்கு                உயர்பதவி வழங்கப்பட்டது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@                 

RAMALAN SAINS 2014

SAINS

Sunday, September 7, 2014

தமிழ் மொழிக் கேள்வி வங்கி

தமிழ் மொழிக் கேள்வி

வழிகாட்டி கட்டுரை




மாதிரிக் கதை ........!!!!


===================================================================


கதையின் தொடக்கம் - UPSR KERTAS 2


கதையின் தொடக்கம் வித்தியாசமாக அமைய வேண்டும்அது மட்டுமே மற்றவர்களின் 
கதையிலிருந்து ஒரு மாணவனின் கதையை வித்தியாசப்படுத்திக் காட்டும்மேற்கண்ட 
படத்திற்கு எப்படியெல்லாம்தொடக்கத்தை எழுதலாம் எனப் பார்ப்போம்.தொடக்கம் 1அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் 
உறைந்து போனார்கள்.

கமலாவின் கைகள் நடுங்கினகமலா ‘ஆ!” என்றே கத்திவிட்டாள்அம்மா அப்பாவின் தோள்
 பட்டையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டார்என்ன  செய்வதென்று தெரியாமல்
அனைவரும் விழித்துக் கொண்டிருந்தார்கள்.

தொடக்கம் 2மணி 11-ஐ நெருங்கியிருந்ததுகமலா வழக்கமாக இரவில் தாமதமாகத்தான்

 படுப்பாள்.கமலா கெட்டிக்காரி மாணவிஇரவில்வெகுநேரம் கதைப்புத்தகங்களை 
வாசிக்கக்கூடியவள்ஆசிரியர் கொடுத்த பாடங்களை முடித்து விட்ட பிறகே அறை
 சன்னலைச் சாத்துவாள்அன்றும் சன்னலைச் சாத்துவதற்காகச் சென்றாள்.

அப்பொழுது...

*****************************************************
மெதுபயில் மாணவர்களுக்கென ஒரு சில கதை வர்ணனைகளை சூழலுக்கேற்ப எல்லா வழிகாட்டிக் கட்டுரைக்கும் பயன்படுத்தலாம்:
காலை நேரம்
கிழக்கில் சூரியன் உதித்ததும் இலைகளில் தங்கியிருந்த பனித்துளிகள் மெல்ல மறையத் துவங்கின. சூரியனின் ஒளிக்கதிர்கள் வானத்தைப் பிளந்து கொண்டு கண்களில் பாய்ந்தன. கொக்கரக்கோ என்ற சேவலின் உரத்த கூவல் பொழுது விடிந்ததை உணர்த்தியது(மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
மதிய நேரம்
உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கொப்ப அந்நேரத்தில் நிழலைத் தேடியே பலரின் கால்கள் நடைப்போட்டன. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
மாலை நேரம்
மேற்கில் வெயில் மறைந்து கொண்டிருந்த நேரம். சூரியன் தன் முகத்தை ஒளித்துக் கொண்டிருந்தது. வானத்திலிருந்து இருள் மெதுவாக இறங்கியது.(மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
இரவு நேரம்
நிசப்தமான நேரம். பரந்து விரிந்திருந்த வான் முழுவதும் விண்மீன் கூட்டங்கள் பெரியவையும் சிறியவையுமாய் நிறைந்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. வெளிச்சம் மங்கிய வேளையில் காயும் நிலா ஒளி எங்கும் பரவியிருந்தது. இரவு பூச்சிகளின் ரீங்காரம் இனிமையான இசையைப் போல கேட்டுக் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
திடல்
விசாலமான புல்வெளி. கருமை நிறத்திலான காலை நேர பனிமேகம் தான் அளவில்லா ஆசைகொண்ட புல்வெளியிடமிருந்து பிரிய மனமின்றி அழுதுகொண்டிருக்கிறது. சிந்திய பனித்துளிகளை தன் நுனி உடம்பில் வைத்திருந்தன பச்சை நிறப் புற்கள். தன் கடமையினை நேரந்தவராது செய்யும் கதிரவன் அடிவானிலிருந்து சமூகளிக்கிறான் . கதிரவனைக் கண்டதும் பனித்துளிகள் எங்கோ ஓடி மறைந்தன. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
வகுப்பறை
மாணவர்கள் அனைவரும் அவரவர் வேளையில் மூழ்கியிருந்தனர். முகிலன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மாணவர்களின் புத்தகப்பை அனைத்தும் வாய்ப் பிளந்து கிடந்தன. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
சாலை
வாகனங்களின் பீங்ங்ங்ங்’ எனும் ஹார்ன் சத்தம் எங்கும் எதிரொலித்தது. வாகனங்கள் இரயில் போல வரிசையாகச் சென்று கொண்டிருந்தன.

கப்பலோட்டிய தமிழன்

பிரிடிஷ்காரர்களை விரட்டியடிக்க, அவர்களுக்கு போட்டியாக ஒரு கப்பல் நிறுவனத்தையே தொடங்கி, ஆங்கிலேயரின் அடி மடியிலேயே கைவைத்த "கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சிதம்பரம் பிறந்த தினம், 1872, செப்டம்பர் 5.. 
கப்பலோட்டிய தமிழன்
பிரிடிஷ்காரர்களை விரட்டியடிக்க, அவர்களுக்கு போட்டியாக ஒரு கப்பல் நிறுவனத்தையே தொடங்கி, ஆங்கிலேயரின் அடி மடியிலேயே கைவைத்த "கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சிதம்பரம் பிறந்த தினம், 1872, செப்டம்பர் 5.. 


VIDEO

பிரிடிஷ்காரர்களை விரட்டியடிக்க, அவர்களுக்கு போட்டியாக ஒரு கப்பல் நிறுவனத்தையே தொடங்கி, ஆங்கிலேயரின் அடி மடியிலேயே கைவைத்த "கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சிதம்பரம் பிறந்த தினம், 1872, செப்டம்பர் 5.. 

HE ! He ! Cuti Penggal 2 akan bermula

SOALAN-SOALAN PERCUBAAN UPSR

SCIENCE
BAHASA MELAYU
MATEMATIK
BAHASA TAMIL
BAHASA INGGERIS

தமிழ் மொழி தாள் 1 ஆண்டு 4

தமிழ் மொழி

4 ரோஜா மாணவர்கள் கவனத்திற்கு..மேற்கணட் தமிழ் மொழி எனும் சொல்லைச் சொடுக்கியதும் கேள்விகள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் படியெடுத்து கேள்விகளுக்குப் பதில் அளித்து எதிர்வரும் 12.9.2014 -ல் ஒப்படைக்கவும். நன்றி.


மாதிரி கட்டுரை ; தன் கதை / சுய சரிதை


நான் ஒரு பள்ளிக் காலணி (தன் வரலாறு)


 குறிப்பு/விடுகதை

                என்னை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து செல்வார்கள். மாணவர்களின் பாதங்களில் 

முள் குத்தாமல் இருக்க நான் பாதுகாப்பாக இருப்பேன். நான் ஒரு பள்ளி காலணி.

பெயர்/தன்மை

                என் பெயர் “ஸ்பார்க்”. நான் வெள்ளை நிறத்தில் இருப்பேன். என் உடலின் மேல்பகுதியில் 

இரண்டு பக்கங்களிலும் ஓட்டைகள் இருக்கும். அதில் கயிறைக் கோர்த்து 
என்னை இறுக்கிக் கட்ட முடியும். மாணவர்களின் கால்களை விட்டு எங்கும் 
போகமலிருக்க அப்படிக் கட்ட வேண்டும்.

                   பிறப்பு/ செய்யப்பட்ட விதம்

                நான் கோலாலம்பூரிலுள்ள ஸ்பார்க் காலணி தொழிற்சாலையில் பிறந்தேன். என்னை

 மாட்டுத்தோலால் தயாரித்தார்கள். நான் பளபளப்பாகக் காட்சியளிப்பேன். 
என்னுடன் என்னைப் போலவே பல நண்பர்கள் பிறந்தார்கள்.  என்னை ஒரு
 பெட்டிக்குள் வைத்து முழுமையாக அடைத்தார்கள்.

               பயணம் / விற்பனை

                ஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு செல்வந்தர் மாணவர்களுக்கு அன்பளிப்பாக 

 வழங்குவதற்காக  ரிங்கிட் மலேசியா 800.00 வெள்ளிக் கொடுத்து வாங்கிச் 
சென்றார். நாங்கள் ஒரு பெரிய காரின் மூலம் தமிழ்ப்பள்ளிக்கு அழைத்துச் 
செல்லப்பட்டோம். 


               அப்பள்ளியின் தோட்டக்காரர் எங்களைக் காரிலிருந்து இறக்கி மண்டபத்தில் அடுக்கி

 வைத்தார். எல்லாம் மாணவர்களும் என் அழகைக் கண்டு வியந்தனர். அந்தச் செல்வந்தர் 
அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு எங்களை அங்குள்ள 60 மாணவர்களுக்கு
 இலவசமாக அளித்தார். மேடையில் இருந்த மேசையிலிருந்து எங்களை 
ஒவ்வொருவராக எடுத்து மாணவர்களிடம் வழங்கினார்.

                குமுதன் என்ற 5ஆம் ஆண்டு மாணவன் என்னைப் பெற்றுக்கொண்டான். என்னை

 அவன் மகிழ்ச்சியுடன் தொட்டுப் பார்த்தான். என் உடலின் வெண்மையைக் கண்டு
 வியந்தான். என் உடலை அவன் தொடும்போது எனக்குக் கூச்சமாக இருந்தது
. அவனுடைய காலுக்கு மிகப் பொருத்தமானவனாகத் திகழ்ந்தேன். 

              பயன்பாடு

               அன்றிலிருந்து அவன் என்னைப் பள்ளிக்கு அணிந்து சென்றான். அவன் என்னை 

அணிந்ததும் அவனுடைய கால்களை நான் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன். சாலையில் 
நடக்கும்போது என் மீது சேறும் அழுக்குகளும் படாமல் பாதுகாத்தான். 
வாரம்தோறும் என் உடலில் வெள்ளைச் சாயத்தைப் பூசுவான். என் மேனி புதிய 
அழகுடன் மிளிரும்.

               அவன் என்னைப் பள்ளி முடிந்து வந்து பந்து விளையாடவும் பயன்படுத்தினான். 

அன்றாடம் மாலையில் என்னை அணிந்துகொண்டு பந்து விளையாடப் போட்டுச்
 செல்வான். அவன் பந்தைப் பலம் கொண்டு உதைக்கும்போது என் உடல் நடுங்கிப் 
போய்விடும்.

              அனுபவம்

                 சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய முன் வாய் கிழிந்துவிட்டது. எப்பொழுதும் வாய் 

பிளந்தே காணப்பட்டேன். குமுதன் நடக்கும்போது எதிரில் கிடக்கும் கற்களை
 அப்படியே விழுங்கிக் கொள்வேன். ஆதலால் அவன் என் மீது கோபமுற்றான். 
குமுதன் தன் அப்பாவிடம் என்னைக் காட்டி கடையில் கொடுத்து தைக்குமாறு 
கேட்டான். அவனுடைய அப்பாவும் என்னை மோட்டாரின் முன் வக்குளில் வைத்து 
எடுத்துக்கொண்டு போனார். போகும் வழியில் கனத்த மழையும் காற்றும் 
வீசியதால் இடையிலேயே நான் மோட்டாரிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டேன்.

தற்போதைய நிலை

               அந்தப் பக்கமாக வந்த ஒரு முதியவர் என்னைக் கண்டவுடன் மனம் மகிழ்ச்சியடைந்தார். 

வறுமையில் இருக்கும் அந்தக் குடும்பத்தின் பேரனுக்கு என்னைப் பரிசாக அளித்தார். 
என் பழைய நண்பன் குமுதனை நினைத்துக் கொண்டே என் புதிய நண்பனுக்காக 
வாழ்கிறேன்.

CONTOH KERTAS KERJA

Contoh Kertas Kerja Program Sekolah

INTERNATIONAL DIGITAL INNOVATION AND INVENTION CHALLENGE IDIIC 2021 WONS GOLD MEDAL/ சர்வதேச டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கோர் தமிழ்ப்பள்ளிக்குத் தங்கம்!!!

  இரண்டாவது முறையில் பங்கோர் தமிழ்ப்பள்ளி மாணவர்களான செல்வி ம.கார்த்திஷா, செல்வி க.திவ்யாஷினி மற்றும் செல்வி க.டியானா ஆகிய மூவரும் பசுமை தொழ...